Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பண்டிகைக் கால விமானக் கட்டண மானியம்: மக்களின் அதிருப்தியைக் குறைத்துள்ளது

Share:

செப்பாங், ஜன.26-

விழாக் காலங்களில் விமானக் கட்டண உயர்வை கட்டுப்படுத்தும் அரசின் முயற்சியால் மக்களின் அதிருப்தி குறைந்துள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார். அதிகபட்ச கட்டண நிர்ணயமும் மானியங்கள் வழங்கியதன் மூலமும், முன்பு 2000 ரிங்கிட் வரை இருந்த கட்டணங்கள் தற்போது கட்டுக்குள் வந்துள்ளன. இது அரசின் ஒரு வருட நடவடிக்கையின் வெற்றிக்குச் சான்றாகும் என்றார் அவர்.

அரசு அதிகபட்ச கட்டணமாக 499 ரிங்கிட்டை நிர்ணயித்திருந்தாலும், சில விமான நிறுவனங்கள் 300 ரிங்கிட் வரை குறைந்த கட்டணத்தில் சேவைகளை வழங்குகின்றன. இது அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் மக்கள் பயனடைந்துள்ளனர் என்பதை காட்டுகிறது. இந்த முயற்சியால் விமானங்களில் 95 விழுக்காடு இருக்கைகள் நிரம்பியுள்ளதாக அவர் கூறினார்.

தேவையை பூர்த்தி செய்ய மாஸ், ஏர் ஆசியா, பாதேக் ஏர் போன்ற விமான நிறுவனங்கள் கூடுதல் விமானங்களை இயக்கி வருகின்றன. சபா - சரவாக்கிற்கு 349 ரிங்கிட் முதல் ஒரு வழி நிலையான கட்டணத்தை மாஸ் வழங்குகிறது. அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி