ஷா ஆலாம், மே.18-
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையமான கேஎல்ைஏ முனையம் மற்றும் அம்பாங் ஜெயா பகுதிகளில், கடந்த மே 6 முதல் 11-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட தொடர் சோதனைகளில் நான்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளில் மொத்தம் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்துள்ளார்.
அவர்களில் ஓர் உள்ளூர் ஆடவர், 3 வெளிநாட்டு ஆடவர்கள் மற்றும் 3 வெளிநாட்டுப் பெண்களும் அடங்குவர்.
மேலும், மேற்கொள்ளப்பட்ட இந்த நான்கு சோதனைகளில் 172.8 கிலோ கஞ்சா மற்றும் 79 கிலோ methamphetamine வகை போதைப்பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருட்களின் மொத்த எடை 251.8 கிலோ என்றும், அதன் மதிப்பு சுமார் 17.8 மில்லியன் ரிங்கிட் என்றும் ஷாஸெலி கஹார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








