May 24, 2026
Thisaigal NewsYouTube
பதவி விலக வழங்கப்படும் நெருக்குதலை பொருட்படுத்த போவதில்லை!
தற்போதைய செய்திகள்

பதவி விலக வழங்கப்படும் நெருக்குதலை பொருட்படுத்த போவதில்லை!

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 13-

2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து தாம் வகித்துவரும் பெர்லிஸ் மந்தேரி பெசார் பொறுப்பிலிருந்து விலக, தமக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, சமூக ஊடகத்தில் கூறப்படுவதை, தாம் அறிந்திருக்கவில்லை என முகமது சுக்ரி ராம்லி தெரிவித்துள்ளார்.

அதுபோன்ற சிறுப்பிள்ளைத்தனமான அரசியல் விளையாட்டுகளை தாம் பொருட்படுத்தப் போவதில்லை என பெர்லிஸுக்கான பாஸ் ஆணையருமான அவர் கூறினார்.

கடந்த ஏப்ரலில், 300 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான விநியோக திட்டத்தில் அதிகார முறைகேடு புரிந்ததாக, சுக்ரி-யின் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையை மேற்கொண்டது.

அவரது மகன் முகமது சயஃபீக், போலி ஆவணங்களை சமர்பித்து, 19 ஆயிரத்து 505 வெள்ளி நிதி கோரியதாக, அவர் மீது கங்கர் செஷன்ஸ் நீதிமன்றத்தில், கடந்த மே 23ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News