May 6, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் தெப்ராவ் தொழிற்சாலையில் அதிரடி சோதனை: 356 சட்டவிரோதத் தொழிலாளர்கள் கைது
தற்போதைய செய்திகள்

ஜோகூர் தெப்ராவ் தொழிற்சாலையில் அதிரடி சோதனை: 356 சட்டவிரோதத் தொழிலாளர்கள் கைது

Share:

ஜோகூர் பாரு, டிசம்பர்.18-

தெப்ராவ் தொழிற்பேட்டையிலுள்ள, கணினி உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில், குடிநுழைவு அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகப் பணியாற்றி வந்த 356 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் இந்த சோதனை நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டதாக ஜோகூர் மாநில குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தொ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் தெரிவித்துள்ளார்.

இச்சோதனை நடத்தப்படுவதற்கு முன்பாக உளவுத்துறையின் மூலம் அங்கு சட்டவிரோதத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அந்த தொழிற்சாலையைச் சேர்ந்த இரு மனிதவள அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

திடீரென நடத்தப்பட்ட இச்சோதனையின் போது, பலர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர்.

என்றாலும், தொழிற்சாலையின் அனைத்து வாயில்களிலும் அதிகாரிகள் காவலுக்கு நின்றதால், வேறு வழியின்றி அவர்கள் சரணடைந்ததாகவும் முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் தெரிவித்துள்ளார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்