ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் வெளிநாட்டைச் சேர்ந்த எட்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பினாங்கு, ஜார்ஜ்டவுனில் உள்ள பட்ஜெட் ஹோட்டல்கள், பிரமுகர்கள் தங்கும் வளாகங்கள் மற்றும் அடுக்குமாடி வீட்டுப்பகுதிகளில் போலீசார் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் 25 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்நிய நாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டதாக பினாங்கு, திமூர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் சோஃபியன் சாண்டோங் தெரிவித்தார்.
தவிர சம்பந்தப்பட்ட அந்நிய நாட்டுப் பெண்கள் ஒழுங்கீன நடவடிக்கைக்கு பயன்படுத்திய சாதனங்கள் மற்றும் 2,200 வெள்ளி ரொக்கம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


