Jul 1, 2026
Thisaigal NewsYouTube
71 வயது முதியவருக்கு 7 நாள் போலீஸ் தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

71 வயது முதியவருக்கு 7 நாள் போலீஸ் தடுப்புக்காவல்

Share:

கடன் தகராறு காரணமாக கோத்தா திங்கி, தாமான் கோத்தா ஜெயாவில் உள்ள உணவகத்திற்கு முன்பாக நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில், ஒரு பெண் உட்பட மூவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 71 வயது முதியவர் ஒருவர் 7 நாட்களுக்கு தடுப்புக்காலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோத்தா திங்கி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட அந்த முதியவர், குற்றவியல் சட்டம் 302-வது பிரிவின் கீழ் தடுத்து வைக்க

மாஜிஸ்திரேட் நூர்காலிதா ஃபர்ஹானா அபு பாக்கர் உத்தரவிட்டுள்ளார்.

தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் 37 முதல் 63 வயதுக்குட்பட்ட மூன்று நபர்களை அந்த முதியவர் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் அந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

தனிப்பட்ட கடன் விவகாரமே இந்தக் கொலைகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் அப் ரஹமான் அர்சாத் தெரிவித்துள்ளார்.

Related News

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

4 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை

2018 முதல் தொடரும் களப்பணி; ஸ்கூடாய் மக்களின் பேராதரவோடு களம் காணும் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி

2018 முதல் தொடரும் களப்பணி; ஸ்கூடாய் மக்களின் பேராதரவோடு களம் காணும் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி