Apr 20, 2026
Thisaigal NewsYouTube
71 வயது முதியவருக்கு 7 நாள் போலீஸ் தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

71 வயது முதியவருக்கு 7 நாள் போலீஸ் தடுப்புக்காவல்

Share:

கடன் தகராறு காரணமாக கோத்தா திங்கி, தாமான் கோத்தா ஜெயாவில் உள்ள உணவகத்திற்கு முன்பாக நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில், ஒரு பெண் உட்பட மூவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 71 வயது முதியவர் ஒருவர் 7 நாட்களுக்கு தடுப்புக்காலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோத்தா திங்கி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட அந்த முதியவர், குற்றவியல் சட்டம் 302-வது பிரிவின் கீழ் தடுத்து வைக்க

மாஜிஸ்திரேட் நூர்காலிதா ஃபர்ஹானா அபு பாக்கர் உத்தரவிட்டுள்ளார்.

தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் 37 முதல் 63 வயதுக்குட்பட்ட மூன்று நபர்களை அந்த முதியவர் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் அந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

தனிப்பட்ட கடன் விவகாரமே இந்தக் கொலைகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் அப் ரஹமான் அர்சாத் தெரிவித்துள்ளார்.

Related News

சிலாங்கூர் தீவில் சடலம் மீட்பு: கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை

சிலாங்கூர் தீவில் சடலம் மீட்பு: கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை

தந்தை பெரியாரின் சிந்தனைகளே மலேசியத் தமிழர்களின் விழிப்புணர்விற்கு அடிப்படை: டான்ஸ்ரீ க.குமரன் புகழாரம்

தந்தை பெரியாரின் சிந்தனைகளே மலேசியத் தமிழர்களின் விழிப்புணர்விற்கு அடிப்படை: டான்ஸ்ரீ க.குமரன் புகழாரம்

மாணவர்களின் படைப்பாற்றல் எல்லை மீறக்கூடாது - உயர் கல்வி அமைச்சு எச்சரிக்கை

மாணவர்களின் படைப்பாற்றல் எல்லை மீறக்கூடாது - உயர் கல்வி அமைச்சு எச்சரிக்கை

போர்ச் சூழலுக்கு மத்தியிலும் ஹார்முஸ் நீரிணையைத் தாண்டிய மலேசிய மற்றும் இந்தியக் கப்பல்கள்

போர்ச் சூழலுக்கு மத்தியிலும் ஹார்முஸ் நீரிணையைத் தாண்டிய மலேசிய மற்றும் இந்தியக் கப்பல்கள்

SME நிறுவனங்களுக்கு 500 கோடி ரிங்கிட்  உதவி: பிரதமர் அன்வார்  அறிவிப்பு

SME நிறுவனங்களுக்கு 500 கோடி ரிங்கிட் உதவி: பிரதமர் அன்வார் அறிவிப்பு

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: திடீர் வெள்ளம் மற்றும் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: திடீர் வெள்ளம் மற்றும் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு