தேசிய நில மேம்பாட்டு வாரியமான ஃபெல்டா குடியேற்றவாசிகளுக்கு மழைக்கால உதவித் தொகையாக 800 வெள்ளி வழங்கப்பட உள்ளது.
ரிஸ்டா அமைப்பின் வாயிலாக கிடைக்கப்பெற்ற 9.4 மில்லியன் வெள்ளி ஒதுக்கீட்டில் இந்த உதவித் தொகை நாடு முழுவதும் தகுதி பெற்ற 11 ஆயிரத்து 784 இரப்பர் தோட்ட ஃபெல்டா குடியேற்றவாசிகளுக்கு வழங்கப்பட உள்ளது என ஃபெல்டா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அந்த உதவித் தொகை இவ்வாண்டு டிசம்பர் முதல் அடுத்தாண்டு பிப்பரவரிக்குள் 3 கட்டங்களாக பகிர்ந்தளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








