உலகளாவிய பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ள மலேசியா தனது பின்னடைவுத் திறனை வலுப்படுத்த வேண்டும் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.
உலகளாவிய செலவின அதிகரிப்பு மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்புகளால் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக கோலாலம்பூரில் நடைபெற்ற 'மலேசியா மடானி அறிஞர்கள் மன்றத்தின் 11-வது தொடரில்' பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். பெட்ரோலிய இருப்பு போதுமானதாக இருந்தாலும், டீசல் மற்றும் உரத் தட்டுப்பாடு போன்ற சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் பல்லின ஒற்றுமையே இத்தகைய நெருக்கடிகளைச் சமாளிக்க உதவும் எனத் தெரிவித்த அவர், மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் உலகப் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.








