நீலாய் யில் உள்ள தடுப்பு முகாமிலிருந்து தப்பிய கைதி ஒருவர் ,முன்று மணி நேர தேடுல் வேட்டைக்கு பிறகு நேற்று இரவு வளைத்துப் பிடிக்கப்பட்டார். அந்நிய நாட்டைச் சேர்ந்த அந்த சந்தேகப்பேர்வழி, மந்தின் தடுப்பு முகாமிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓர் இடத்தில் பதுங்கியிருந்தது தெரியவந்துள்ளது என்று சிறைச்சாலை இலாகா அதிகாரி தெரிவித்துள்ளார். நேற்று மாலை 6.55 மணியளவில் சிறைச்சாலை இலாகாவிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்ற நீலாய் மவாட்ட போலீஸ் தலைமையகம், அந்த கைதியை பிடிப்பதற்கு ஓப்ஸ் துதுப் என்ற தேடுதல் வேட்டையை தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார். குற்றவியல் சட்டம் 395 ஆவது பிரிவின் கீழ் 10 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அந்த அந்நிய நாட்டவர், மீண்டும் கைது செய்யப்பட்டது முலம் விசாரணைக்கு ஏதுவாக 4 நாள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி மேலும் விவரித்தார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


