நீலாய் யில் உள்ள தடுப்பு முகாமிலிருந்து தப்பிய கைதி ஒருவர் ,முன்று மணி நேர தேடுல் வேட்டைக்கு பிறகு நேற்று இரவு வளைத்துப் பிடிக்கப்பட்டார். அந்நிய நாட்டைச் சேர்ந்த அந்த சந்தேகப்பேர்வழி, மந்தின் தடுப்பு முகாமிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓர் இடத்தில் பதுங்கியிருந்தது தெரியவந்துள்ளது என்று சிறைச்சாலை இலாகா அதிகாரி தெரிவித்துள்ளார். நேற்று மாலை 6.55 மணியளவில் சிறைச்சாலை இலாகாவிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்ற நீலாய் மவாட்ட போலீஸ் தலைமையகம், அந்த கைதியை பிடிப்பதற்கு ஓப்ஸ் துதுப் என்ற தேடுதல் வேட்டையை தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார். குற்றவியல் சட்டம் 395 ஆவது பிரிவின் கீழ் 10 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அந்த அந்நிய நாட்டவர், மீண்டும் கைது செய்யப்பட்டது முலம் விசாரணைக்கு ஏதுவாக 4 நாள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி மேலும் விவரித்தார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

பெருநாள் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் -பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டாம்

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது


