நெகிரி செம்பிலானின் யாங் டி-பெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர், லுவாக் சுங்கை உஜாங்கின் 11-வது உண்டாங் தலைவராக பாரிஸ் ஜொஹாரியின் நியமனத்தை இன்று காலை இஸ்தானா பெசார் ஸ்ரீ மெனாந்தியில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.
பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த விழாவில், புதிய உண்டாங், யாங் டி-பெர்துவான் பெசாருக்குத் தனது விசுவாச உறுதி மொழியை எடுத்துக்கொண்டதைத் தொடர்ந்து, துவாங்கு முஹ்ரிஸ் அவருக்கு ‘டத்தோ கிளானா பெத்ரா’ என்ற பட்டத்தை வழங்கி பிரகடனப்படுத்தினார்.
விழாவில் உரையாற்றிய யாங் டி-பெர்துவான் பெசார், "தலைவர்கள் அனைவரும் நெகிரி செம்பிலான் அரச பரிபாலனத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்; அரண்மனையுடன் நெருக்கமான மற்றும் மரியாதைக்குரிய உறவைப் பேண வேண்டும்" என நினைவுறுத்தினார்.
புதிய உண்டாங்காகப் பொறுப்பேற்றுள்ள 28 வயது ஃபாரிஸ் ஜொஹாரி, யுஐடிஎம் பல்கலைக்கழகத்தின் கணக்கியல் பட்டதாரி மற்றும் ஏசிசிஏ தகுதி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.








