Sep 13, 2026
Thisaigal NewsYouTube
காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்காவுடன் அன்வார் சந்திப்பு
தற்போதைய செய்திகள்

காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்காவுடன் அன்வார் சந்திப்பு

Share:

18-வது பிரிக்ஸ் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா சென்றுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அங்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரியும், கேரளா வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோரை இன்று காலை உணவின் போது சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பில் இரு நாட்டு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மேலும், இச்சந்திப்பின் போது பேசப்பட்ட விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

காலை உணவருந்துவதற்கான மேசையில் தலைவர்கள் சுமுகமாக உரையாடுவதையும், ராகுல் காந்தியும், அன்வார் இப்ராஹிமும் புன்னகையுடன் கைகுலுக்குவதையும் காட்டும் படங்கள் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

முன்னதாக நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய அன்வார், இன்று எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

Related News

இந்தியாவின் அதிவேக பிராமோஸ் ஏவுகணையை வாங்க மலேசியா பரிசீலனை: அன்வார் - மோடி சந்திப்பில் முக்கிய முடிவு

இந்தியாவின் அதிவேக பிராமோஸ் ஏவுகணையை வாங்க மலேசியா பரிசீலனை: அன்வார் - மோடி சந்திப்பில் முக்கிய முடிவு

லெபோ புடு பகுதியில் சட்டவிரோத கிளினிக்குகள் முடக்கம் - போலி மருந்துகள் பறிமுதல்

லெபோ புடு பகுதியில் சட்டவிரோத கிளினிக்குகள் முடக்கம் - போலி மருந்துகள் பறிமுதல்

புதிய துணை ஐஜிபி நியமனம் குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் தகவல்

புதிய துணை ஐஜிபி நியமனம் குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் தகவல்

சரவாக்கில் ஹெலிகாப்டர் மருத்துவச் சேவை நிறுத்தப்பட்டதால் 14, 830 பேர் பாதிப்பு

சரவாக்கில் ஹெலிகாப்டர் மருத்துவச் சேவை நிறுத்தப்பட்டதால் 14, 830 பேர் பாதிப்பு

ஊழல் நிதி மீட்பது மட்டுமல்ல; நாட்டின் நம்பிக்கையையும் மீட்டெடுக்க வேண்டும்: அன்வார்

ஊழல் நிதி மீட்பது மட்டுமல்ல; நாட்டின் நம்பிக்கையையும் மீட்டெடுக்க வேண்டும்: அன்வார்

அலோர் காஜாவில் பீப்பாயில் சிமெண்ட் பூசப்பட்ட நிலையில் மனித உடல் பாகங்கள் மீட்பு

அலோர் காஜாவில் பீப்பாயில் சிமெண்ட் பூசப்பட்ட நிலையில் மனித உடல் பாகங்கள் மீட்பு