Mar 19, 2026
Thisaigal NewsYouTube
மைகார்டு சவால்கள்: டிஜிட்டல் அடையாளத்தைப் பாதுகாப்பதிலும் உதவி வழங்குவதிலும் அரசுக்கு உள்ள சிக்கல்கள்!
தற்போதைய செய்திகள்

மைகார்டு சவால்கள்: டிஜிட்டல் அடையாளத்தைப் பாதுகாப்பதிலும் உதவி வழங்குவதிலும் அரசுக்கு உள்ள சிக்கல்கள்!

Share:

மலேசியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் அடையாளச் சின்னமாகக் கருதப்படும் மைகார்டு எனும் மலேசிய அடையாள அட்டை, அரசாங்கத்தின் உதவிகளைப் பெறும் பயனாளிகளின் தரவுகளில் ஏற்படும் தொழில்நுட்பப் பிழைகளைச் சரிசெய்வதாக உள்துறை அமைச்சு உறுதியளித்த பின்னர் மீண்டும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மைகார்டு தரவுச் சரிபார்ப்பில் ஏற்படும் பிழையால் தகுதியுள்ள யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் வலியுறுத்திய போதிலும், தரவுப் பொருத்தமின்மை காரணமாக உதவி மறுக்கப்பட்டதாகப் பல பயனாளிகள் புகார் தெரிவித்ததால் மக்களின் கவலை இன்னும் குறையவில்லை.

இன்றைய நவீன உலகில், மைகார்டு என்பது வெறும் அடையாள அட்டை மட்டுமல்ல; அஃது அரசு உதவித் திட்டங்கள், மருத்துவச் சிகிச்சை, வேலைவாய்ப்பு, நிதிப் பரிவர்த்தனைகள் போன்ற அன்றாட வாழ்க்கையின் பல்வேறு கூறுகளுக்கான முக்கிய நுழைவாயிலாக உள்ளது. இந்த அமைப்பில் ஏற்படும் தோல்வி, குடிமக்களின் அன்றாட வாழ்க்கையை நிலைகுலையச் செய்து, அவர்கள் தகுதியான உரிமைகளை மறுக்க வழிவகுக்கிறது.

அரசாங்கத்தின் உத்தரவாதம் வரவேற்கத்தக்கது என்றாலும், அதில் ஏற்படும் பிழைகளுக்கானப் பொறுப்பை யார் ஏற்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், தேசியப் பதிவுத் துறை (JPN), உள்துறை அமைச்சு, நிதி அமைச்சு போன்ற பல்வேறு முகமைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு இல்லாதது, தரவுப் பிழைகளும் அடையாள மோசடிகளும் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.

இதில், உண்மையான சவால் என்பது, நாட்டில் தனிநபர் தரவுப் பாதுகாப்பு எவ்வளவு வலிமையாக உள்ளது என்பதைச் சார்ந்துள்ளது. மைகார்ட்டைப் பயன்படுத்தும் டிஜிட்டல் அமைப்புகளின் ஒருமைப்பாட்டிற்குக் காவற்படை அதே முன்னுரிமையை வழங்க வேண்டும். அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி, முறையான தணிக்கை, இணையப் பாதுகாப்பை மேம்படுத்துதல், குடிமக்களுக்கு அவர்களின் டிஜிட்டல் அடையாளப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை உடனடியாகச் செய்ய வேண்டும். இந்த மைகார்டு அடையாள அட்டைச் சிக்கல் அரசாங்கத்தின் செயல்திறனையும் மக்கள் நம்பிக்கையையும் சோதிக்கும் ஒரு முக்கியமான தருணமாகும்.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்