Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி கழிப்பறை சீரமைப்பில் முறைகேடா ? எஸ்.பி.ஆர்.எம்  இடம் முகார் செய்வீர்
தற்போதைய செய்திகள்

பள்ளி கழிப்பறை சீரமைப்பில் முறைகேடா ? எஸ்.பி.ஆர்.எம் இடம் முகார் செய்வீர்

Share:

பள்ளிக் கழிவறை பழுதுபார்க்கும் குத்தகையாளர்களை நியமிப்பதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று சந்தேகம் எழுந்தால் உடனடியாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் அளிக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

பள்ளியின் கழிவறை பழுதுபார்க்கும் குத்தகையாளர்களை அமைச்சு கண்காணித்து வருவதாகவும், தற்போது வரையில் எந்தவித புகாரும் தமது தரப்பு பெறவில்லை எனவும் அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.

சீரமைப்புப் பணிகள் ஏறத்தாழ 80 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாகவும், நிர்ணயித்தபடி அனைத்து பள்ளிகளிலும் கூடிய விரைவில் நிறைவடைந்து விடும் எனவும் அவர் கூறினார்.

முன்னதாக, கழிப்பறை சீரமைப்புப் பணிகளுக்காக ஒவ்வொரு பள்ளிக்கும் கல்வி அமைச்சு 70 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கி இருந்தது. னைந்த நிதி முறையாக செலவிடப்படுமா அல்லது குத்தகையாளர்களால் முறையாகக் கையாளப்படுமா என பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் யங் சைஃபுரா ஓத்மான் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில், செய்தியாளர்களிடம் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் இந்த விளக்கத்தைத் தந்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு