போலீஸ தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தனிநபர் ஒருவர், தாக்கப்பட்டடதாக சமுக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி தொடர்பாக போலீசார் ஒளிமறைவின்றி விசாரணை நடத்துவர் என்று தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி சா ஹூங் ஃபோங் தெரிவித்தார்.
இக்குற்றச்சாட்டை போலீசார் கடுமையாக கருதுவதாகக் கூறிய எசிபி சா ஹூங் ஃபோங், இவ்விவகாரத்தில் எந்தவொரு தரப்பிரையும் தற்காக்காமல் நேர்மையான முறையில் விசாரணை நடைபெறும் என்று எசிபி சா ஹூங் ஃபோங் உறுதி அளித்தார்.
இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று நேற்று காலையில் சமுக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலை 10.30 மணியளவில் தென் கிள்ளான் மாவட்ட போதைப்பொருள் துடைத்தொழிப்பு போலீஸ் பிரிவில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது என்று எசிபி சா ஹூங் ஃபோங் மேலும் விவரித்தார்.
அக்காணெளியில் போலீசார் என நம்பப்படும் இரண்டு நபர்கள், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஆடவர் ஒருவரின் கைகால்களையும் மிதிக்கும் காட்சி பதிவாகியுள்ளது.








