Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதப் பண மாற்றம்: மேலும் பல வங்கி அதிகாரிகள் கைது செய்யப்படலாம்

Share:

புத்ராஜெயா, ஜன.16-


நிதி ஆலோசனை நிறுவனம் ஒன்றுடன் கூட்டாக சேர்ந்து, சட்டவிரோதப் பண மாற்றம் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் மேலும் பல வங்கி அதிகாரிகள், விரைவில் கைது செய்யப்படலாம் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். அறிவித்துள்ளது.

நிதி ஆலோசனை நிறுவனத்தின் இந்த சட்டவிரோத செயலில் சம்பந்தப்பட்டுள்ள வங்கி அதிகாரிகளின் செயல்கள், தற்போது ஆராயப்பட்டு வருவதாக எஸ்.பி.ஆர்.எம்.மின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கும்பலுடன் சேர்ந்து, மேலும் சில தனிநபர்கள் இந்த மோசடி வேலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

எஸ்.பி.ஆர்.எம். தொடங்கிய ஓப்ஸ் ஸ்கை நடவடிக்கையின் மூலம் இதுவரையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கடந்த செவ்வாய்க்கிழமை புத்ராஜெயா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக்காவலுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்