Aug 12, 2026
Thisaigal NewsYouTube
1,319 புதிய இராணுவ வீரர்கள் சம்பள உயர்வைப் பெறுவர்
தற்போதைய செய்திகள்

1,319 புதிய இராணுவ வீரர்கள் சம்பள உயர்வைப் பெறுவர்

Share:

போர்ட்டிக்சன், மே.18-

இராணுவப் பயிற்சி தொடர் 202/2024 ஐ முடித்த 1,319 புதிய இராணுவ வீரர்கள், முழுமையாக புதிய பொதுச் சேவை ஊதியத் திட்டமான எஸ்எஸ்பிஏவின் கீழ் சம்பள உயர்வைப் பெறுவார்கள். இராணுவத் தளபதி டான் ஶ்ரீ முகமட் ஹபிஃஸுடின் ஜந்தான் கூறுகையில், அவர்கள் பயிற்சிக் காலத்தில் பெற்ற 1,610 ரிங்கிட்டை விட, கல்வித் தகுதிக்கு ஏற்ப 1,710 ரிங்கிட் முதல் 1,930 ரிங்கிட் வரை தொடக்கச் சம்பளமாகப் பெறுவார்கள் என்றார். இதற்கு முன்பு அவர்களின் சம்பளம் 1,459 ரிங்கிட் ஆக இருந்தது.

இந்த முறை புதிய சம்பளத் திட்டத்தைப் பெறும் முதல் குழு இதுவாகும். மேலும், இராணுவத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எந்தவொரு வீரரையும் இராணுவம் விட்டுக் கொடுக்காது. சமீபத்தில் மலாக்காவில் ஒரு மாணவியைப் பாலியல் வன்கொடுமைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் இராணுவ வீரர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். அந்த வீரர் தற்போது காவல் துறையின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் இராணுவம் மேலதிக நடவடிக்கை எடுக்கும் என்றார்.

Related News

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது