தெரெங்கானு, ஜூலை 05-
திரெங்கானு, ஜெர்ட்டிஹ , ஹுலு பேசுத் , கம்போங் பக் சிக் என்ற கிராமத்தில் உள்ளூர் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த ஆண் யானை ஒன்று, வன விலங்கு மற்றும் தேசியப் பூங்காவான பெர்லீதான் மூலம் இன்று இடம் மாற்றப்பட்டது.
ஒரு தந்தத்தை மட்டுமே கொண்டு இருந்த அந்த யானை கடந்த திங்கட்கிழமை காலை 9 மணிக்கு பிடிக்கப்பட்டு இடம் மாற்றம் செய்யப்பட்டது.
உலு திரெங்கானுவில் உள்ள கொல டேக யானைகள் சரணாலயத்திற்கு இடம் மாற்றம் செய்வதற்கு ஏதுவாக அந்த அந்த யானையை பிடிப்பதற்கு கும்கி யானையின் துணையுடன் பெர்லீதான்- னின் 17 பணியாளர்கள் ஈடுபட்டதாக திரெங்கானு மாநில இயக்குநர் லு கீன் ஸோங் தெரிவித்தார்.
காயமுற்ற அந்த யானை, வனப்பகுதியிலிருந்து வழி தவறி அந்த கிராமத்திற்குள் நுழைந்து இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.








