பினாங்கு, Sungai Bakap சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, வருகின்ற ஜுலை 2 ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிப்பு எதுவும் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இம்மாநிலத் தொகுதியின் கீழ் இருக்கின்ற 57 காவலர்களும் தபால் வாக்காளர்களாக விண்ணப்பம் செய்துள்ளதாக Sungai Bakap இடைத்தேர்தலின் அதிகாரி Khairulnizam Hashim கூறினார்.
ஆக, முன்கூட்டியே வாக்களிக்கும் வாக்காளர்கள் தபால் முறையில் வாக்களிக்க பதிவு செய்துள்ளதை தொடர்ந்து, வருகின்ற ஜுலை 2 ஆம் தேதி எந்தவொரு முன்கூட்டியே வாக்களிப்பு இருக்காது என்று Khairulnizam இன்று தெரிவித்தார்.
நாளை பிற்பகல் 2.30 மணியளவில் முன்கூட்டியே வாக்களிப்பவர்களுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று அவர் குறிப்பிட்டார்.








