இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் காரில் பயணம் செய்த இருவர் உயிர் இழந்தனர். இச்சம்பவம் இன்று காலை 3 மணி அளவில் புக்கிட் மெர்தாஜாம் தாமான் ஶ்ரீ ரம்பாயில் நிகழ்ந்தது. அவர்கள் பயணித்த கார் எதிரே வந்த லோரியுடன் எதிரும் புதிருமாக மோதியதில் இருவரும் சம்பவம் நிகழ்ந்த இடத்திலே மான்டனர். 37 மற்றும் 26 வயதுடைய இருவர் இச்சம்பவத்தில் உயிர் இழந்ததாக போலிசார் அடையாலம் கூறினர். காரின் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக்கொண்ட அந்த இருவரையும் மீட்பதற்கு தீயணைப்பு மீட்பு படையினரின் உதவியை போலிசார் நாடினர். இடிபாடுகளுக்கிடையில் சிக்கியவர்களைச் சிறப்பு சாதனங்கள் கொண்டு அவர்களின் உடல்களை மீட்டனர்.

Related News

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 Lenova Tablet கைக்கணினி வழங்கப்பட்டது

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா தற்காலிக விடுப்பு

ஆசிரியை மரணம்: ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கோரிக்கை வலுக்கிறது

போலி மற்றும் மாற்று அடையாள அட்டைகளைப் பயன்படுத்திய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

கோலாலம்பூர் - கொச்சின் விமானத்தில் அவசரகால கதவைத் திறக்க முயன்ற பயணி கைது


