கெடா மாநில மக்களுக்கு தாம் எதிரி அல்ல என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தியுள்ளார். கெடா மாநில மக்களின் மேம்பாட்டிற்கு உதவவே தாம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கெடா மாநிலத்தில் தம்முடைய மடானி மலேசியா ஹரிராயா திறந்த இல்ல பொது உபசரிப்பு நடத்தப்படுவதற்காக மக்கள் தம்மை ஆதரிக்க வேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்ளவில்லை. மாறாக, கெடா மாநிலத்தில் ஒற்றுமை அரசாங்கம் கொண்டுள்ள மேம்பாட்டுத் திட்டங்களுக்காக தமது தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு நல்கும்படி கெடா மாநில மக்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.
கெடா மாநில அரசாங்கத்திற்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்ட போதிலும் மாநிலத்தின் மேம்பாட்டிற்காக மத்திய அரசாங்கம் கொண்டுள்ள திட்டத்திற்காக வருகின்ற கெடா மாநில சட்டமன்றத் தேர்தலில் தமது தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News

குடியுரிமை பெற்றிருப்பது மட்டுமே ஒருவரின் தேசிய அடையாளத்தை நிரூபிக்காது: ஜசெகவின் 'Anak Malaysia' கருத்திற்கு பாஸ் கடும் விமர்சனம்

அரசாங்கம் மாறினால் சிபு பாலத் திட்டம் பாதிக்கப்படும் – சரவாக் முதல்வர் எச்சரிக்கைநான்

அமலாக்க அதிகாரி மீது தாக்குதல்: ஈப்போ மாநகராட்சி கடும் கண்டனம்

கங்காரில் மூட்டைக்குள் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

சபாவில் வெள்ளம்: 5,500-க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக வளாகங்களில் குடிநீர் விநியோகம் பாதிப்பு


