கெடா மாநில மக்களுக்கு தாம் எதிரி அல்ல என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தியுள்ளார். கெடா மாநில மக்களின் மேம்பாட்டிற்கு உதவவே தாம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கெடா மாநிலத்தில் தம்முடைய மடானி மலேசியா ஹரிராயா திறந்த இல்ல பொது உபசரிப்பு நடத்தப்படுவதற்காக மக்கள் தம்மை ஆதரிக்க வேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்ளவில்லை. மாறாக, கெடா மாநிலத்தில் ஒற்றுமை அரசாங்கம் கொண்டுள்ள மேம்பாட்டுத் திட்டங்களுக்காக தமது தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு நல்கும்படி கெடா மாநில மக்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.
கெடா மாநில அரசாங்கத்திற்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்ட போதிலும் மாநிலத்தின் மேம்பாட்டிற்காக மத்திய அரசாங்கம் கொண்டுள்ள திட்டத்திற்காக வருகின்ற கெடா மாநில சட்டமன்றத் தேர்தலில் தமது தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது


