கெடா மாநில மக்களுக்கு தாம் எதிரி அல்ல என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தியுள்ளார். கெடா மாநில மக்களின் மேம்பாட்டிற்கு உதவவே தாம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கெடா மாநிலத்தில் தம்முடைய மடானி மலேசியா ஹரிராயா திறந்த இல்ல பொது உபசரிப்பு நடத்தப்படுவதற்காக மக்கள் தம்மை ஆதரிக்க வேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்ளவில்லை. மாறாக, கெடா மாநிலத்தில் ஒற்றுமை அரசாங்கம் கொண்டுள்ள மேம்பாட்டுத் திட்டங்களுக்காக தமது தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு நல்கும்படி கெடா மாநில மக்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.
கெடா மாநில அரசாங்கத்திற்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்ட போதிலும் மாநிலத்தின் மேம்பாட்டிற்காக மத்திய அரசாங்கம் கொண்டுள்ள திட்டத்திற்காக வருகின்ற கெடா மாநில சட்டமன்றத் தேர்தலில் தமது தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்


