Dec 3, 2025
Thisaigal NewsYouTube
டயர் வெடித்து கார் விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகனும் மரணம்
தற்போதைய செய்திகள்

டயர் வெடித்து கார் விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகனும் மரணம்

Share:

டயர் வெடித்ததில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, சாலைத் தடுப்பில் மோதி, மேலும் இரு வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தையும்,மகனும் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 276.9 ஆவது கிலோ​மீட்டரில் ​நீலாய்க்கு அருகில் நிகழ்ந்தது. பெரோடுவா கான்சில் காரில் பயணித்த 30 வயது நபர், சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் அவரின் 2 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்ததாக போ​லீசார் தெரிவித்தனர். தவிர உயிரிழந்த நபரின் 27 வயது மனைவி மற்றும் அவர்களின் ஐந்து வயதுடைய மேலும் ஒரு பிள்ளை கடுமையான காயங்களுடன் சிரம்பான், துவான்கு ஜாஃபார் மருத்துவமனையில்​ சேர்க்கப்பட்டு, ​தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று ​நீலாய் மாவட்ட போ​லீஸ் தலைவர் சுப்பெர்ன்தென்டென் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் விபத்துக்குள்ளான மேலும் இரு வாகனமோட்டிகள் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்