May 18, 2026
Thisaigal NewsYouTube
சுகாதாரமற்ற சூழலில் அந்நியத் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டனர்: வீரப்பன் தலைமையில் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

சுகாதாரமற்ற சூழலில் அந்நியத் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டனர்: வீரப்பன் தலைமையில் நடவடிக்கை

Share:

சிரம்பான், ஜூலை.01-

அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனங்கள், தங்கள் தொழிலாளர்களுக்கு முறையான அடிப்படை வசதிகளைச் செய்யத் தவறியிருப்பது தொடர்பில் அத்தகைய நிர்வாகங்களுக்கு எதிராக நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம் தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஜுன் 26 ஆம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நெகிரி செம்பிலான் முகிம் ரந்தாவிற்கு உட்பட்ட ஒரு கட்டுமானத் தளத்தில் வீரப்பன் தலைமையில் ஓப்ஸ் மம்பாவ் எனும் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

போலீஸ் படை, குடிநுழைவுத்துறை, சொக்சோ, வேலையிடச் சுகாதாரப் பாதுகாப்பு இலாகா, சுகாதார இலாகா, ஆள்பல இலாகா என நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பல்வேறு அரசாங்க ஏஜென்சிகளின் 46 அமலாக்க அதிகாரிகள் கொண்ட குழுவிற்குத் தலைமையேற்று வீரப்பன் இந்தச் சோதனையை மேற்கொண்டார்.

ஓஎஸ்கே கன்ஸ்ரக்‌ஷன் நிறுவனத்தின் 171 அந்நியத் தொழிலாளர்களுக்கு முறையான குடியிருப்புகளை ஏற்படுத்தித் தராதது, சுகாதாரமற்ற சூழலில் அவர்களின் தங்கும் இடம் மற்றும் ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் தங்குவதற்கான நிலை இருந்தது முதலியவற்றைத் தாங்கள் கண்டறிந்ததாக வீரப்பன் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் மூன்று வார காலக் கட்டத்திற்குள் அந்த நிறுவனம் தொழிலார்களுக்கான குடியிருப்புத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு நெகிரி செம்பிலான், ஆள்பல இலாகா பல்வேறு நிபந்தனைகளை விதித்திருப்பதாக வீரப்பன் குறிப்பிட்டார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி