Mar 31, 2026
Thisaigal NewsYouTube
எச்.ஆர்.டி. கோர்ப். எந்த தவற்றையும் இழைக்கவில்லை எஸ்.பி.ஆர்.எம். அறிவித்தது
தற்போதைய செய்திகள்

எச்.ஆர்.டி. கோர்ப். எந்த தவற்றையும் இழைக்கவில்லை எஸ்.பி.ஆர்.எம். அறிவித்தது

Share:

புத்ராஜெயா, டிச.9-


மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு இலக்காகிய மனித வள அமைச்சின் மனித வள மேம்பாட்டுக்கழமான எச்.ஆர்.டி. கோர்ப். எந்த தவற்றையும் இழைக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். விசாரணையிலிருந்து எச்.ஆர்.டி. கோர்ப். விடுவிக்கப்படுவதாக அந்த ஆணையத்தின் அதிகாரி புவாட் செடட் குறிப்பிட்டார்.

எச்.ஆர்.டி. கோர்ப்.க்கு எதிராக பொது கணக்காய்வுக்குழு தெரிவித்த ஊழல் புகார் தொடர்பில் நாங்கள் விசாரணை அறிக்கையைத் திறந்தோம், அதன் அடிப்படையில் எச்.ஆர்.டி. கோர்ப். தலைமை அலுவலகத்திலிருந்து கோப்புகள் கைப்பற்று, அதன் முக்கிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் எஸ்.பி.ஆர்.எம். சட்டத்தின் கீழ் எச்.ஆர்.டி. கோர்ப். எந்த தவற்றையும் இழை ழக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது என்று Fuad Sedet தெரிவித்துள்ளார்.

Related News