Mar 24, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்க ஊழியரிடம் MCMC ஆணையம் விசாரணை
தற்போதைய செய்திகள்

அரசாங்க ஊழியரிடம் MCMC ஆணையம் விசாரணை

Share:

கோலா மூடா , ஜூலை 15-

தனது டிக் டாக் கணக்கில் இனம், சமயம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3 R விவகாரம் தொடர்பில் அருவருக்கத்தக்க கருத்தை பதிவேற்றம் செய்ததற்காக அரசாங்க ஊழியர் ஒருவரை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் விசாரணை செய்து வருகிறது.

29 வயது மதிக்கத்தக்க அந்த அரசு ஊழியரை போலீசார், கடந்த வாரம் வியாழக்கிழமை, கெடா, சுங்கை பட்டாணி-யில் உள்ள கோலா மூடா போலீஸ் நிலையத்தில் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் அந்த நபரின் விவேக கைப்பேசி மற்றும் 3 R தொடர்புடைய உள்ளடக்கங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News