May 28, 2026
Thisaigal NewsYouTube
மருத்துவர் குறித்து மூன்று விசாரணை அறிக்கைகள்
தற்போதைய செய்திகள்

மருத்துவர் குறித்து மூன்று விசாரணை அறிக்கைகள்

Share:

ஜார்ஜ்டவுன், மார்ச்.24-

சிகிச்சைக்கு வரும் பெண்களைச் சோதனை என்ற பெயரில் ஆடை களையச் செய்து, வக்கிர செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் மருத்துவர் ஒருவருக்கு எதிராக மூன்று விசாரணை அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்ஸா அஹ்மாட் தெரிவித்தார்.

அந்த மூன்று அறிக்கைகள், மாநில பிராசிகியூட்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்போது பிராசிகியூட்டர் அலுவலகத்தின் அடுத்த உத்தரவுக்காக பினாங்கு போலீசார் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

43 வயதுடைய அந்த மருத்துவருக்கு எதிராக மூன்று வெவ்வேறு போலீஸ் புகார்களைப் பாதிக்கப்பட்டப் பெண்கள் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் அந்த மருத்துவர் இரண்டு முறை கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டுள்ளார் என்று டத்தோ ஹம்ஸா மேலும் கூறினார்.

கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி மருத்துவரின் பிடியில் சிக்கிய 25 வயது பெண் அளித்த முதலாவது போலீஸ் புகாரைத் தொடர்ந்து அடுத்தடுத்த சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டப் பெண்கள் புகார் அளிக்கத் தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது