Mar 31, 2026
Thisaigal NewsYouTube
விமானப் பயணத்திற்கான 499 உதவித்தொகை திட்டம் தொடரும்
தற்போதைய செய்திகள்

விமானப் பயணத்திற்கான 499 உதவித்தொகை திட்டம் தொடரும்

Share:

டிச.5-

பண்டிகை காலங்களில் தீபகற்ப மலேசியாவிலிருந்து சபா சரவாவிற்கு செல்வதற்கு ஒரு வழி விமானப் பயணத்திற்கு உதவித் தொகை அடிப்படையில் அரசாங்கம் நிர்ணயித்துள்ள 499 ரிங்கிட் விமானக்கட்டண முறை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற கிறிஸ்துமஸ், புத்தாண்டு,சீனப்புத்தாண்டு, நோன்புப்பெருநாள், Kematan மற்றும் Gawai ஆகிய பண்டிகை காலங்களில் இக்கட்டண முறை அமலில் இருக்கும் என்று போக்குவரத்து அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பண்டிகை காலங்களில் தங்கள் கிராமங்களுக்கு திரும்புகின்ற மலேசியர்களுக்கு நிதிச் சுமையை குறைப்பதற்கு இந்த திட்டம் உதவும் என்று போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பண்டிகை காலத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, இத்திட்டம் அமலில் இருக்கும் என்பதையும் போக்குவரத்து அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

Related News