Jun 15, 2026
Thisaigal NewsYouTube
டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், ரஃபிஸி ரம்லிக்கு வீட்டில் சந்தேகிக்கும் பொட்டலம் பெறப்பட்டது.
தற்போதைய செய்திகள்

டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், ரஃபிஸி ரம்லிக்கு வீட்டில் சந்தேகிக்கும் பொட்டலம் பெறப்பட்டது.

Share:

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் பொருளாதாரா அமைச்சர் ரஃபிஸி ரம்லி ஆகியோரின் வீடுகளுக்கு முகவரியிடப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்ட சந்தேகத்திற்கு இடமான பொருட்களில் அபாயகர போதைப்பொருள் எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை. மாறாக, பற்பசை மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர், டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

இன்று ஷா ஆலாமில், சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய டத்தோ ஹுசேன் ஒமார், அப்பொருட்கள் ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார்.

அந்த இரு பொட்டலங்களையும் ஒரே நபர்தான் அனுப்பியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட ஆடவரை அடையாளம் காணும் நடவடிக்கையைப் போலீசார் துரிதப்படுத்தப்பட்டுயிருப்பதாகவும் ஹுசேன் ஒமார் விளக்கினார்.

கடந்த திங்கட்கிழமை, சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி வான் கமருல் அஸ்ரான் வான் யூசுப் வெளியிட்ட தகவலின்படி இதற்கு முன்பு, புத்ராஜெயா, அரசாங்க நிர்வாக பாதுகாப்பு மையத்திலிருந்து கிடைக்கப்பெற்ற புகாரில் மேற்கண்ட இரு அரசியல்வாதிகளின் பெயர்களுக்கும் பொட்டலங்கள் பெறப்பட்டதாக தெரிவித்து இருந்தார்.

சம்பந்தப்பட்ட தலைவர்களின் அலுலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த பொட்டலங்களில் தடைச் செய்யப்பட்ட கஞ்சா இலைகள் இருந்தது தெரியவந்தது என்று வான் கமருல் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்