Mar 22, 2026
Thisaigal NewsYouTube
மாணவி ஸாரா கைரினா மகாதீர் மரண விசாரணையில் 5 மாணவிகளின் வழக்கறிஞர்கள் பங்கேற்க அனுமதி
தற்போதைய செய்திகள்

மாணவி ஸாரா கைரினா மகாதீர் மரண விசாரணையில் 5 மாணவிகளின் வழக்கறிஞர்கள் பங்கேற்க அனுமதி

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.03-

சபா மாநிலத்தில் மரணம் அடைந்த முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மகாதீர் மீதான மரண விசாரணை கோத்தா கினபாலு நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.

இந்த மரண விசாரணையில், மாணவி ஸாராவைப் பகடிவதை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 5 மாணவிகளின் வழக்கறிஞர்கள் பங்கு கொள்வதற்கு மரண விசாரணை நீதிபதி அமீர் ஷா அமீர் ஹசான் அனுமதி அளித்தார்.

அந்த ஐந்து மாணவிகளும், இவ்வழக்கில் நலன் சார்ந்த தரப்பினர் என்று கருதுப்படுவதால் அந்த மாணவிகளின் வழக்கறிஞர்கள் பங்கு கொள்வதற்குத் தடை ஏதும் இல்லை என்று நீதிபதி அமீர் ஷா தெரிவித்தார்.

இந்த மரண விசாரணையில் ஐந்து மாணவிகளின் வழக்கறிஞர்கள் பங்கு கொள்ளும் முடிவை, கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இது தொடர்பான விண்ணப்பத்தை நேரடியாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல், மரண விசாரணை நீதிபதியிடம் ஐந்து மாணவிகளின் வழக்கறிஞர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று உயர்நீதிமன்றம் ஆலோசனை கூறியிருந்தது.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு