நாடு சுதந்திரம் பெற்றது முதல் அரசாங்க உயர்க்கல்விக்கூடங்களில் மாணவர் சேர்ப்புக்கு ஓர் அளவுக்கோலாக பயன்படுத்ப்படும் கோட்டா முறை அகற்றப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று திட்டவட்டாக தெரிவித்துள்ளார். தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் தொடர்ந்து கோட்டா முறையை அமல்படுத்தி வரும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
நாட்டில் உயர்க்கல்விக்கூடங்களில் சமூகவியல் நீதி உறுதிசெய்யப்படுவதற்கும், அதன் கோட்பாடு பராமரிக்கப்படுவதற்கும் கேட்டா முறை இன்றியமையாததாகும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். உயர்க்கல்விக்கூடங்களில் கோட்டா முறை அகற்றப்படுமானால் வருகின்ற அனைத்துப் பொதுத் தேர்தல்களிலும் ஒற்றுமை அரசாங்கம் தோல்வியை தழுவதற்கான ஆபத்து காத்திருப்பதாக பிரதமர் விளக்கினார்.
தவிர நாட்டின் வரலாறு, அதன் பின்னணி மற்றும் இனங்களுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட சமூகவியல் ஒப்பந்தம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கோட்டா முறை நிலைநிறுத்தப்பட வேண்டுமே தவிர அதனை அகற்றுவதற்கான கோரிக்கையை விடுக்க முடியாது என்று பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தற்போதைய செய்திகள்
பொது உயர்க் கல்விக்கூட்டங்களில் கோட்டா முறை அகற்றப்படாது - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் திட்டவட்டம்
Related News

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்

கூட்டரசு பிரதேச தினம் - தைப்பூசம் ஒரே நாளில்: அரசு ஊழியர்கள் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையைப் பின்பற்ற கியூபெக்ஸ் அறிவுறுத்தல்


