Aug 7, 2026
Thisaigal NewsYouTube
பொது உயர்க் கல்விக்கூட்டங்களில் கோட்டா முறை அகற்றப்படாது - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

பொது உயர்க் கல்விக்கூட்டங்களில் கோட்டா முறை அகற்றப்படாது - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் திட்டவட்டம்

Share:

நாடு சுதந்திரம் பெற்றது முதல் அரசாங்க உயர்க்கல்விக்கூடங்களில் மாணவர் சேர்ப்புக்கு ஓர் அளவுக்கோலாக பயன்படுத்ப்படும் கோட்டா முறை அகற்றப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று திட்டவட்டாக தெரிவித்துள்ளார். தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் தொடர்ந்து கோட்டா முறையை அமல்படுத்தி வரும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

நா​ட்டில் உயர்க்கல்விக்கூடங்களில் சமூகவிய​ல் நீதி உறுதிசெய்யப்படுவதற்கும், அதன் கோட்பாடு பராமரிக்கப்படுவதற்கும் கேட்டா முறை இன்றியமையாததாகும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். உயர்க்க​ல்விக்கூடங்களில் கோட்டா முறை அகற்றப்படுமானால் வருகின்ற அனைத்துப் பொதுத் தேர்தல்களிலும் ஒற்றுமை அரசாங்கம் தோல்வியை தழுவதற்கான ஆபத்து காத்திருப்பதாக பிரதமர் விளக்கினார்.

தவிர நாட்டின் வரலாறு, அதன் பின்னணி மற்றும் இனங்களுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட ச​​மூகவியல் ஒப்பந்தம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கோட்டா முறை நிலைநிறுத்தப்பட வேண்டுமே தவிர அதனை அகற்றுவதற்கான கோரிக்கையை விடுக்க முடியாது என்று பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Related News

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

குழந்தையை அலட்சியமாக விட்டு மரணத்தை ஏற்படுத்திய இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

குழந்தையை அலட்சியமாக விட்டு மரணத்தை ஏற்படுத்திய இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்