நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம், வளர்ச்சி நிதியை முடக்குவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் மறுத்துள்ளார். மேம்பாட்டு நிதிகள் மக்கள் பிரதிநிதிகள் மூலம் அல்லாமல், நேரடியாக மக்களுக்கே கொண்டுச் சேர்க்கப்படுவதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இன்று மலாக்கா, அலோர் காஜாவில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், ஒரு தொகுதிக்கு ஒதுக்கப்படும் நிதி நேரடியாகப் பள்ளிகள், பள்ளிவாசல்கள் மற்றும் வடிகால் பழுதுபார்ப்பு போன்ற பொதுப் பணிகளுக்கு மட்டுமே அனுப்பப்படும் என்றார். "எப்போதிலிருந்து நிதி எம்பிக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று சட்டம் வந்தது? நிதி யாருக்குப் போக வேண்டும், எம்பிக்கா அல்லது மக்களுக்கா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறப்புத் தொகுதி நிதியை நிர்வகிக்கும் 'மைக்காஸ்' (MyKhas) அணுகலை தாங்கள் இழந்துள்ளதாக பிகேஆர் கட்சியைச் சேர்ந்த சில எம்பிக்கள் அண்மையில் புகார் அளித்திருந்த நிலையில், பிரதமரின் இந்த விளக்கம் வெளிவந்துள்ளது.








