Sep 7, 2026
Thisaigal NewsYouTube
தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி
தற்போதைய செய்திகள்

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

Share:

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம், வளர்ச்சி நிதியை முடக்குவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் மறுத்துள்ளார். மேம்பாட்டு நிதிகள் மக்கள் பிரதிநிதிகள் மூலம் அல்லாமல், நேரடியாக மக்களுக்கே கொண்டுச் சேர்க்கப்படுவதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இன்று மலாக்கா, அலோர் காஜாவில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், ஒரு தொகுதிக்கு ஒதுக்கப்படும் நிதி நேரடியாகப் பள்ளிகள், பள்ளிவாசல்கள் மற்றும் வடிகால் பழுதுபார்ப்பு போன்ற பொதுப் பணிகளுக்கு மட்டுமே அனுப்பப்படும் என்றார். "எப்போதிலிருந்து நிதி எம்பிக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று சட்டம் வந்தது? நிதி யாருக்குப் போக வேண்டும், எம்பிக்கா அல்லது மக்களுக்கா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறப்புத் தொகுதி நிதியை நிர்வகிக்கும் 'மைக்காஸ்' (MyKhas) அணுகலை தாங்கள் இழந்துள்ளதாக பிகேஆர் கட்சியைச் சேர்ந்த சில எம்பிக்கள் அண்மையில் புகார் அளித்திருந்த நிலையில், பிரதமரின் இந்த விளக்கம் வெளிவந்துள்ளது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து