பினாங்கு, ஜூலை 06-
பினாங்கு, ஜார்ஜ்டவுன், மஸ்ஜித் பத்து பிருங்கி - யின் முன் புறம் நிகழ்ந்த தீ விபத்தில் மூன்று வீடுகள் அழிந்தன. இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாகன் ஜெர்மல் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள், கொழுந்து விட்டு எரியும் தீ, அருகில் உள்ள வீடுகளில் பரவாமல் முழு வீச்சில் கட்டுப்படுத்தினர் என்று அதன் செயலாக்க அதிகாரி மோஹட் ஹேரி பாஸ்ஜி தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் எந்தவொரு உயிர் இழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.








