ஈப்போ, தாமான் ஜெத்தியில் 17 வயதுடைய மாணவனை மூத்த காவல் துறை அதிகாரி மோதிய விவகாரத்தில் இன்று கொலை குற்றச்சாட்டு சாட்டப்பட்டுள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் போதுமான ஆதாரங்கள், வாக்குமூலங்கள் இருப்பதால் சந்தேகிக்கும் நபரை கொலை புரிந்த அடிப்படையில் குற்றவியல் சட்டப் பிரிவின் கீழ் விசாரணை தொடங்க போவதாக சட்டமா அதிபர் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.
44 வயதுடைய சந்தேகிக்கும் மூத்த போலீஸ் அதிகாரியின் வழக்கு விசாரணை ஈப்போவில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் தேதியை விரைவில் நீதிமன்றம் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.
காவல்துறை வழக்குப்பதிவு செய்ய விசாரணையை விரைவுபடுத்துவார்கள் என்று பேரா போலீஸ் தலைவர் யுஸ்ரி ஹாஸ்ஸான் பஸ்ரி கூறியதற்கு அடுத்து ஏஜிசி அறிக்கை வெளியிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.








