ஜொகூர் பாரு,ஜன.10
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாளை வியாழக்கிழமை, ஜோகூர்பாருவில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்- கை சந்திக்கவிருக்கிறார்.
மலேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையில் இரு நாடுகள் நலன் இரண்டு மிகப்பெரிய திட்டங்கள் குறித்து தங்களின் பங்கேற்பையும், கடப்பாட்டையும் உறுதி செய்வதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் நேரடியாக சந்திக்கவிருகின்றனர்.
அன்வாரும், லீ சியென் லூங்- கும் RTS எனப்படும் Rapit Transit System இணைப்புத் திட்டத்தை காலையில் பார்வையிடுவதற்கு அட்டவணையிடப்பட்டுள்ளதாக பெர்னாமா கூறுகிறது.








