ஜன.7-
தைப்பிங், Jalan Aulong, Kampung Boyan- அருகில் பூட்டப்பட்டு இருந்த வீடொன்றில் ஓர் இந்திய ஆடவர் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
உயிரிழந்த நபர் 45 வயது எஸ். சந்திரசேகர் என்று அடையாளம் கூறப்பட்டுள்ளதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து தீயணைப்பு, மீட்புப்டை வீரர்கள் பூட்டப்பட்டு இருந்த வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது ஆடவர் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








