எதிர்கால விமான தொழில்நுட்ப ஆராய்ச்சியில் நாசா மற்றும் முன்னணி பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்றி மலேசியர் ஒருவர் சாதனை படைத்து வருகின்றார்.
33 வயதுடைய டாக்டர் ராஜா அகிஃப் ராஜா ஜாஹிருதின், தற்போது ஜார்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, டேனியல் ககன்கைம் விண்வெளிப் பொறியியல் பள்ளியில், ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.
மேலும், அமெரிக்காவின் நாசா முன்னெடுத்து வரும் ரேவன்-ஜிடி விண்வெளித் திட்டத்தில் நேரடியாகவும் ஈடுபட்டுள்ளார்.
இத்திட்டமானது, மின்சார சக்தியால் இயங்கும் செங்குத்து புறப்பாடு மற்றும் தரையிறக்கம் (eVTOL) செய்யக்கூடிய வகையில், எதிர்கால விமான தொழில்நுட்பங்களை ஆராய்ந்து வருகின்றது.
இத்தகைய விமானங்கள் பாரம்பரிய விமானங்களைப் போல செயல்படுவதுடன், ஹெலிகாப்டர்களைப் போல செங்குத்தாக பறக்கவும் தரையிறங்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.








