May 6, 2026
Thisaigal NewsYouTube
கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை
தற்போதைய செய்திகள்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

Share:

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ஆடவரை மிரட்டி, 300 ரிங்கிட் பணம் பறித்த வழக்கில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட 36 வயதான முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர், இன்று முதல் தனக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவுள்ளார்.

தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுடனான அந்தரங்கக் காணொளியைப் போனில் பதிவு செய்திருந்த ஆடவர் ஒருவரை, அமான் முஸ்தபா என்ற அந்த போலீஸ் அதிகாரி, அக்காணொளியை வெளியிடுவதாக மிரட்டி, பணம் பறித்ததாக, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தனிப்பட்ட லாபத்திற்காக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரசு ஊழியர் ஒருவர், தனது பதவி மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அப்பீல் நீதிமன்ற நீதிபதி நூரின் பதாருதீன் தெரிவித்துள்ளார்.

மேலும், இது போன்ற நடத்தையானது அரசாங்க நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைப்பதாகக் கூறிய நீதிபதி, தண்டனைக்கு எதிராக அமான் முஸ்தபா தாக்கல் செய்திருந்த இறுதி அப்பீல் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்.

Related News

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

மெங்கலும் தீவில் கடலில் விழுந்த இளைஞர் மாயம் - தேடும் பணி தீவிரம்

மெங்கலும் தீவில் கடலில் விழுந்த இளைஞர் மாயம் - தேடும் பணி தீவிரம்

சிலாங்கூரில் பன்றி பண்ணைகள் குடியிருப்பு, நீர் நிலைகளை விட்டு விலகி இருக்க வேண்டும் - ஃபஹ்மி ஃபட்சில் அறிவிப்பு

சிலாங்கூரில் பன்றி பண்ணைகள் குடியிருப்பு, நீர் நிலைகளை விட்டு விலகி இருக்க வேண்டும் - ஃபஹ்மி ஃபட்சில் அறிவிப்பு