சிரம்பான், பிப்ரவரி.01-
சிரம்பானில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அதிக ஒலியெழுப்பும் புகைப்போக்கிகளுடன் அபாயகரமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிய கும்பலை இலக்கு வைத்துப் போக்குவரத்துக் காவற்படை இன்று அதிகாலை ஓபராசி சம்சேங் ஜாலானான் எனும் சிறப்புச் சோதனையை மேற்கொண்டனர். பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் Jalan Persiaran S2 , Jalan Persiaran Senawang 1 ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், சுமார் 53 நபர்களும் 46 வாகனங்களும் விரிவான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
விதிமுறைகளை மீறி புகைப்போக்கிகளை உருமாற்றம் செய்தது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 51 அபராத நோட்டீஸ்கள் வழங்கப்பட்டதோடு, மூன்று மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியதாக 36 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.








