புத்ராஜெயா,ஜன.9
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய ஆதரவை மீட்டுக்கொள்வதற்கு அவர்களுக்க லஞ்சம் கொடுப்பதற்கு பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் 100 கோடி வெள்ளி வரை லஞ்சப் பணத்தை தயார்படுத்தியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை அரசாங்கம் கடுமையாக கருதுவதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
இந்த 100 கோடி வெள்ளி லஞ்சம் தொடர்பாக நாளை புதன்கிழமை நடைபெறவிருக்கும் அமைச்சரவைக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று ஃபாஹ்மி ஃபட்சில் குறிப்பிட்டார்.
தற்போது இந்த விவகாரம் போலீஸ் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் போன்ற அமலாக்கத் தரப்பினரின் விசாரணையில் இருப்பதால் இது குறித்து தம்மால் மேலும் கருத்துரைக்க இயலாது என்று ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.








