புத்ராஜெயா, ஏப்ரல்.11-
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலப்பரப்பில் 34 புதிய சட்டவிரோதக் குடியேற்றங்களை உருவாக்க இஸ்ரேல் எடுத்துள்ள முடிவை மலேசியா வன்மையாகக் கண்டித்துள்ளது.
இது குறித்து வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை அனைத்துலகச் சட்டங்கள் மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை அப்பட்டமாக மீறுவதாகும்.
பாலஸ்தீனத்தின் மக்கள் தொகை கட்டமைப்பை மாற்ற இஸ்ரேல் முயற்சிப்பதாக மலேசியா குற்றம் சாட்டியுள்ளது. இந்த சட்டவிரோதச் செயல்களுக்கு இஸ்ரேலைப் பொறுப்பேற்கச் செய்ய சர்வதேச சமூகம் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலேசியா வலியுறுத்தியுள்ளது.








