Apr 24, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர்: பொறாமையால் விபரீதம் - முன்னாள் மனைவியைக் குத்திக் கொன்ற மியான்மர் ஆடவர்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர்: பொறாமையால் விபரீதம் - முன்னாள் மனைவியைக் குத்திக் கொன்ற மியான்மர் ஆடவர்

Share:

கோலாலம்பூர், செதாபக், கெந்திங் கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில், மியான்மர் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

நேற்று பிற்பகல் 2.20 மணியளவில் மயங்கிய நிலையில் கிடந்த அந்தப் பெண், நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட ஆழமான கத்திக்குத்து காயங்களால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக அதே நாளில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஒருவரைப் போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர் உயிரிழந்த பெண்ணின் முன்னாள் கணவர் என்பதும், பொறாமை காரணமாக இக்கொலை நிகழ்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், சந்தேக நபரை ஏப்ரல் 30-ஆம் தேதி வரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்."

Related News