Mar 17, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் பிரஜை கைது செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் பிரஜை கைது செய்யப்பட்டார்

Share:

ஜொகூர் பாரு,பிப்ரவரி 27 -

ஜொகூர் பாருவில், கடந்த 13 ஆண்டுகளாக ஆவணமற்ற சட்டவிரோதக் குடியேற்றவாசியாக இருந்து வந்த சிங்கப்பூர் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மஜ்லிஸ் பண்டாராயா ஜொகூர் பாரு மற்றும் மஜ்லிஸ் பண்டாராயா பாசிர் கூடாங் ஆகியவற்றுடன் இணைந்து மலேசிய குடிநுழைவுத்துறை மேற்கொண்ட திடீர் சோதனையில் 34 வயதுடைய அந்நபர் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இச்சோதனையின் போது சட்டவிரோதமாக செயல்பட்ட மேலும் நால்வர் கைது செய்யப்பட்டதாக ஜோகூர், மலேசிய குடிநுழைவுத்துறையின் இயக்குநர் பஹாருடின் தாஹீர் கூறினார்.

முன்னதாக, ஜாலான் வாடிஹானா வில் சட்டவிரோதமாக குடியேற்றவாசிகள் இருப்பதாகவும் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுவதுடன் அனுமதியின்றி கடைகளை நிறுவதை குறித்து பொதுமக்களிடமிருந்து கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பஹாருடின் தாஹீர் விவரித்தார்.

மேல் நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்ட அந்நபர்கள் செதியா த்ரோபிக்கா குடிநுழைவுத்துறை தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் இதுக்குறித்து மலேசிய குடிநுழைவுத்துறை அனைத்து அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் என்று பஹாருடின் தாஹீர் தெரிவித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு