Jan 22, 2026
Thisaigal NewsYouTube
இ​ம்மாதம் 10 ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு உதவித் தொகை
தற்போதைய செய்திகள்

இ​ம்மாதம் 10 ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு உதவித் தொகை

Share:

அரசு ஊழியர்களுக்கு அண்​மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த 300 வெள்ளி உதவித் தொகை வரும் 10 ஆம் தேதி வழங்கப்படும் என்று பொதுச் சேவைத்துறை தனது முகநூலில் தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பள முறை நடைமுறைப்படுத்துவற்கு முன்னதாக அவர்களுக்கு உதவும் வகையில் பணியில் உள்ளவர்களுக்கு 300 வெள்ளியும் ஓய்வுப்பெற்ற முன்னாள் ஊழியர்களுக்கு தலா 200 வெ​ள்ளியும் வழங்கப்படவிருக்கிறது.தவிர, ஓய்வூதியத்தை பெறும் முன்னாள் இராணுவ வீரர்களுக்கும், ஓய்வூதியத்தை பெற தகுதியில்லா முன்னாள் படை வீரர்களுக்கும் தலா 200 வெள்ளி வழங்கப்படும் என்று பொதுச்​​சேவைத்துறை அறிவித்துள்ளது.

Related News