9 கோடியே 70 லட்சம் வெள்ளி லஞ்ச ஊழல் தொடர்பில் மனித வள அமைச்சர் வி. சிவகுமாரின் அந்தரங்க செயலாளர் மகேஸ்வரி மற்றும் சிறப்பு அதிகாரி சுகுமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டது தொடர்பில், மனித வள அமைச்சரும், பத்து காஜா எம்.பி.யுமான வி. சிவகுமார், விடுப்பில் செல்ல வேண்டும் என்று பெர்சத்து கட்சியின் பெர்செகுது பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
ஓர் அமைச்சரின் மிக நெருக்கமான அதிகாரிகள் கைது செய்யப்பட்டது, அமைச்சரின் நம்பகத்தன்மையைக் கேள்வி எழுப்புவதாக உள்ளது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM, மகேஸ்வரி மற்றும் சுகுமாறானை விசாரணை செய்து, அவர்களுக்கு எதிரான ஆதாராங்களை திரட்டி, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டும் வரையில் அமைச்சர் சிவகுமார், மனித வள அமைச்சர் பணிகளை மேற்கொள்வது முறை அல்ல என்று பெர்சத்து கட்சியின் பெர்செகுது பிரிவு வலியுறுத்தியுள்ளது.
அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பது தொடர்பில் தங்கக்ச் சொந்த நலன் சார்ந்த ஒரு நிறுவனத்தை அமைத்து ஊழல் புரிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் மஇகாவின் பேரா மாநில முன்னாள் புத்ரி அமைப்பின் தலைவியான மகேஸ்வரி மற்றும் சுகுமாறன் ஆகியோர்எஸ்.பி.ஆர்.எம். மினால் கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


