Mar 11, 2026
Thisaigal NewsYouTube
மனித வள அமைச்சர் சிவகுமார் விடுப்பில் செல்ல வேண்டும்
தற்போதைய செய்திகள்

மனித வள அமைச்சர் சிவகுமார் விடுப்பில் செல்ல வேண்டும்

Share:

9 கோடியே 70 லட்சம் வெள்ளி லஞ்ச ஊழல் தொடர்பில் மனித வள அமைச்சர் ​வி. சிவகுமாரின் அந்தரங்க செயலாளர் மகேஸ்வரி மற்றும் சிறப்பு அதிகாரி சுகுமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டது தொடர்பில், மனித வள அமைச்சரும், பத்து காஜா எம்.பி.யுமான வி. சிவகுமார், விடுப்பில் செல்ல வேண்டும் என்று பெர்சத்து கட்சியின் பெர்செகுது பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

ஓர் அமைச்சரின் மிக நெருக்கமான அதிகாரிகள் கைது செய்யப்பட்டது, அமைச்சரின் நம்பகத்தன்மையைக் கேள்வி எழுப்புவதாக உள்ளது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM, மகேஸ்வரி மற்றும் சுகுமாறானை விசாரணை செய்து, அவர்களுக்கு எதிரான ஆதாராங்களை திரட்டி, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டும் வரையில் அமைச்சர் சிவகுமார், மனித வள அமைச்சர் பணிகளை மேற்கொள்வது முறை அல்ல என்று பெர்சத்து கட்சியின் பெர்செகுது பிரிவு வலியுறுத்தியுள்ளது.

அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பது தொடர்பில் தங்கக்ச் சொந்த நலன் சார்ந்த ஒரு நிறுவனத்தை அமைத்து ஊழல் பு​ரிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் மஇகாவின் பேரா மாநில முன்​னாள் புத்ரி அமைப்பின் தலைவியான மகேஸ்வரி மற்றும் சுகுமாறன் ஆகியோர்எஸ்.பி.ஆர்.எம். மினால் கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து