சூலு வாரிசுதாரர்கள் என்று கூறிக்கொள்ளும் கும்பல் ஒன்று இழப்பீடு கோரி தொடுத்திருந்த வழக்கில் மலேசியா வெற்றி பெற்று இருப்பது வாய்மையே வெல்லும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஸம்ரி அப்தில் காடீர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அப்பீல் நீதிமன்றம் மலேசியாவிற்கு சாதகமாக அளித்துள்ள தீர்ப்பானது, சூலு விவகாரத்தில் மலேசியாவிடம் உண்மை இருக்கிறது என்பதை அந்த நீதிமன்றம் உணர்ந்துள்ளதாக டாக்டர் ஸம்ரி சுட்டிக்காட்டினார்.
குறிப்பிட்ட தரப்பினரின் சுய நலனுக்காக மலேசியாவின் இறையாண்மையைக் கேள்வி எழுப்பும் வகையில் இவ்வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் மலேசியா வெற்றி பெற்று இருப்பது நீதிக்கு கிடைத்த வெற்றியாகும் என்று டாக்டர் ஸம்ரி வர்ணித்துள்ளார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


