கெப்போங்கில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில், 30 வயதுடைய உள்ளூர் பெண் ஒருவர் நேற்று சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் சுயநினைவு இழந்த நிலையில் காணப்பட்ட அப்பெண்ணைப் பரிசோதித்த செலாயாங் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ பணியாளர்கள் அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியதாகவும் கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் நூர் அரிஃபின் நசீர் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், உடலில் வெளிப்படையான காயங்களோ அல்லது போராட்டத்தின் அடையாளங்களோ எதுவும் காணப்படவில்லை என்றும், மரணத்திற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.








