May 18, 2026
Thisaigal NewsYouTube
ஒரு மணி நேர வித்தியாசத்தில் இரு வியாபாரிகள் 100 ரிங்கிட் கள்ள நோட்டைப் பெற்றனர்
தற்போதைய செய்திகள்

ஒரு மணி நேர வித்தியாசத்தில் இரு வியாபாரிகள் 100 ரிங்கிட் கள்ள நோட்டைப் பெற்றனர்

Share:

தம்பின், ஜூன்.24-

நெகிரி செம்பிலான் தம்பினில் இரு வியாபாரிகள், ஒரு மணி நேர வித்தியாசத்தில் 100 ரிங்கிட் கள்ள நோட்டைப் பெற்றதாக புகார் அளித்துள்ளனர்.

அருகில் உள்ள அப்பாம் பாலிக் வியாபாரியிடமிருந்து தனது மனைவி 100 ரிங்கிட் கள்ள நோட்டைப் பெற்றதாக 47 வயது வணிகர் ஹஸ்புல்லா முகமட் சாலே தெரிவித்தார்.

எனினும் தனது மூத்த மகளின் பிறந்த விழாவையொட்டி ஆர்டர் கொடுத்த கேக்கிற்கு அந்த 100 ரிங்கிட்டை செலுத்திய போதுதான், அது கள்ள நோட்டு என்பது தனது மனைவிக்குத் தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதே போன்று ஆடவர் ஒருவரிடம் தாம் பெற்ற 100 ரிங்கிட், கள்ள நோட்டு என்பதைத் தாம் பின்னர்தான் உணர்ந்ததாக 21 வயதுடைய மற்றொரு வியாபாரியான மீரா என்பவர் தெரிவித்தார். பெரோடுவா மைவி ரகக் காரில் வந்த அந்த ஆடவரிடமிருந்து 100 ரிங்கிட் கள்ள நோட்டைத் தாம் பெற்றது ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பில் அவ்விரு வியாபாரிகளும் போலீசில் புகார் அளித்து இருப்பதை தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் அமிருடின் சரிமான் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை