Apr 5, 2026
Thisaigal NewsYouTube
டீசல் மானியக் கட்டுப்பாட்டுத் திட்டம்: மார்ச் மாதத்தில் செலவினம் மூன்று மடங்கு அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

டீசல் மானியக் கட்டுப்பாட்டுத் திட்டம்: மார்ச் மாதத்தில் செலவினம் மூன்று மடங்கு அதிகரிப்பு

Share:

கோத்தா பாரு, ஏப்ரல்.05-

உலகச் சந்தையில் டீசல் விலை உயர்ந்துள்ளதால், மலேசியாவின் டீசல் மானியக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கான செலவினம் கடந்த மார்ச் மாதத்தில் 2.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது. இது அதற்கு முந்தைய மாதத்தின் 700 மில்லியன் ரிங்கிட் செலவினத்தை விட மூன்று மடங்கு அதிகம் என உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிஸான் முஹமட் அலி தெரிவித்தார். உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் டீசல் விலை அதிகரித்த போதிலும், பொதுப் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து உட்பட 33 வகை வாகனங்களுக்குத் தொடர்ந்து மானிய விலையில் டீசல் வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

தற்போது பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு லிட்டருக்கு 1 ரிங்கிட் 88 சென் வீதமும், சரக்குப் போக்குவரத்து வாகனங்களுக்கு 2 ரிங்கிட் 15 சென் வீதமும் மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய மானிய நிலுவைத் தொகையை விரைவாகத் திருப்பிச் செலுத்துவது குறித்து நிதி அமைச்சுடன் ஆலோசிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை