May 24, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்க சார்பு நிறுவனங்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம்
தற்போதைய செய்திகள்

அரசாங்க சார்பு நிறுவனங்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம்

Share:

புத்ராஜெயா,செப்டம்பர் 03-

அரசாங்க சார்பு நிறுவனங்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடி காட்டியுள்ளாரர்.

ஓர் அரசாங்க சார்பு நிறுவனம், கொண்டுள்ள அதே செயல்பாட்டையும், பங்களிப்பையும், மற்றொரு சார்பு நிறுவனம் கொண்டிருப்பது, / அரசு சார்பு நிறுவனங்களில் பணிசார்ந்த மோதல்கள் ஏற்படுவது / மற்றும் கட்டுப்பாடற்ற செலவினங்கள் / முதலிய சிக்கல்களை தீர்ப்பதற்காக அவற்றின் பணித்தன்மையை பகுத்து ஆராய்வதற்கு நிதி அமைச்சின் கீழ் செயலகம் ஒன்று அமைக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த செயலகத்தை உடனடியாக அமைப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

ஓர் அரசாங்க சார்பு நிறுவனம் செய்யக்கூடிய பணியை மற்றொரு சார்பு நிறுவனம் செய்யாமலும், இதன் மூலம் கட்டுப்பாடற்ற நிதி செலவினம் ஏற்படுவதை தடுக்கவும் அவற்றை கண்காணிக்கும் ஓர் ஒருங்கிணைந்த மையமாக அந்த செயலகம் விளங்கும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

தற்போது அதிகமான அரசாங்க சார்பு நிறுவனங்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், அவற்றின் எண்ணிக்கை குறைக்கப்படுவதற்கான சாத்தியத்தையும் மேற்கோள்காட்டினார்.

Related News

சுங்கை பூலோவில் ஆற்றில் விழுந்து காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

சுங்கை பூலோவில் ஆற்றில் விழுந்து காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

ஜோகூர் பி.கே.ஆர்: கட்சியை இழிவுபடுத்தும் முன்னாள் தலைவர்களின் போக்கை டாக்டர் ஸாலிஹா சாடினார்

ஜோகூர் பி.கே.ஆர்: கட்சியை இழிவுபடுத்தும் முன்னாள் தலைவர்களின் போக்கை டாக்டர் ஸாலிஹா சாடினார்

தியாகத் திருநாள், பள்ளி விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக 50 கூடுதல் பேருந்துகள் தயார்

தியாகத் திருநாள், பள்ளி விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக 50 கூடுதல் பேருந்துகள் தயார்

திட்ட நிர்வாகியிடமிருந்து 6.3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: கூலிமில் போலீஸ் அதிரடி

திட்ட நிர்வாகியிடமிருந்து 6.3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: கூலிமில் போலீஸ் அதிரடி

கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: அமைச்சர் ரமணன் உறுதி

கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: அமைச்சர் ரமணன் உறுதி

சுகாதாரப் பரிசோதனையில் பாதியினருக்குத் தொற்றா நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

சுகாதாரப் பரிசோதனையில் பாதியினருக்குத் தொற்றா நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது