Mar 22, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்தில் துப்பாக்கிகளுடன் பிடிபட்ட மலேசிய ஆடவர் திட்டமிட்ட குற்றச்செயல் கும்பலுடன் தொடர்புடையவரா?
தற்போதைய செய்திகள்

தாய்லாந்தில் துப்பாக்கிகளுடன் பிடிபட்ட மலேசிய ஆடவர் திட்டமிட்ட குற்றச்செயல் கும்பலுடன் தொடர்புடையவரா?

Share:

பாலிங், செப்டம்பர்.05-

தாய்லாந்து, டானோக்கில் சாலை தடுப்பு சோதனையின் போது M16 ரகத்திலான இரண்டு ரைபில் துப்பாக்கிகள் மற்றும் 450 தோட்டாக்களுடன் பிடிபட்ட மலேசிய ஆடவர், திட்டமிட்ட குற்றச்செயல் கும்பலுடன் தொடர்புடையவரா அல்லது வெறுமனே துப்பாக்கிகளைக் கடத்தி வரும் போக்குவரத்து சேவை வழங்கும் நபரா? என்பது குறித்து விசாரணை செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

துப்பாக்கிகளையும், தோட்டாக்களையும் தாய்லாந்திலிருந்து பெறுவதற்கான அந்த மலேசிய பிரஜையின் உண்மையான நோக்கம் என்ன, அவரது பின்னணி என்ன என்பது குறித்து விரிவாக ஆராயப்படும் என்று சைஃபுடின் குறிப்பிட்டார்.

இது, ஒரு கும்பலாக செயல்படும் சிண்டிக்கேட் கூறுகள் அல்லது குற்றச்செயல்கள் தொடர்புடையது அல்ல என்று தொடக்க விசாரணையில் பெரிதாகக் கருதப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

எனினும் மலேசியாவிற்கும், தாய்லாந்துக்கும் இடையில் அரசாங்க அளவில் மட்டுமின்றி போலீஸ் துறையுடனும் நல்லதொரு தொடர்பு இருப்பதால் இந்தச் சம்பவம் தொடர்பில் மலேசியா உடனடியாக தகவல் பெற்றதாக சைஃபுடின் குறிப்பிட்டார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி