ஆசியான் – ஜப்பான் ஞாபகர்த்த உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 656 கோடி வெள்ளி மதிப்புள்ள முதலீட்டு வாய்ப்புகளை கவர்ந்துள்ளார்.
ஜப்பானிய பிரதமர் ஃபுமியா கிஷிடா உட்பட பல்வேறு தரப்பினரை சந்தித்ததன் விளைவாக மலேசிய இந்த முதலீட்டு வாய்ப்புகளை பெற முடிந்தது என்று தலைநகர் தோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் அன்வார் இதனை தெரிவித்தார்.
தம்முடைய ஜப்பான் பயணம் , அதிகமான முதலீட்டு வாய்ப்புகளை கவர்ந்திருப்பது மூலம் வெற்றியை அளித்துள்ளது என்று அன்வார் குறிப்பிட்டார்.








